திருப்பத்தூர் அருகே டேங்கர் லாரி மோதி ஒருவர் பலி

திருப்பத்தூர் அருகே டேங்கர் லாரி மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு போலீசார் விசாரணை

Update: 2021-06-20 12:32 GMT

விபத்து ஏற்படுத்திய லாரி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தண்ணீர்பந்தல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரவி, மற்றும் பரசுராமன் ஆகிய இருவரும் திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோடு விசமங்களம் அருகே  இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிரே வந்த டேங்கர் லாரியில் நேருக்கு நேர் மோதியதில் ரவி என்பவர் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழப்பு.

பலத்த படுகாயங்களுடன் பரசுராமன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து  குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறைனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News