திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற நபர் கைது
திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு க்கு விஷம் வைத்துக் கொன்ற நபரை கைது செய்து வனத்துறையினர் நடவடிக்கை;
மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபரை கைது செய்த வனத்துறையினர்
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த இருணாபட்டு பகுதியை சார்ந்த வடிவேல் மகன் மேகநாதன் (38) இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்து ஏராளமான தேசியப் பறவையான மயில்கள் உணவு தேடி இவருடைய நிலத்திற்கு வந்து செல்வது வழக்கம்
இதன் காரணமாக இன்று காலை மயில்களை கொல்வதற்காக எலிக்கு வைக்கக்கூடிய குருணை என்ற விஷத்தை உணவில் சேர்த்து வைத்து உள்ளார். இதன் காரணமாக உணவு தேடி வந்த 7 மயில்கள் விஷத்தை உண்டு இறந்து கிடந்தன
இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிரிஜல உத்தரவின்பேரில் மேகநாதனை கைது! செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.