கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பலி

திருப்பத்தூரில் இரவு பெய்த கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பலி

Update: 2021-11-17 12:53 GMT

வீடு இடிந்து விழுந்ததில் பலியான ராமன் 

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இரவு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது

திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமன் (42) என்பவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு  மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

அதுமட்டுமின்றி கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அதே பகுதியில் உள்ள அவருடைய அம்மா வீட்டில் பிள்ளைகளுடன் தனிக்குடித்தனம் சென்று வசித்து வந்ததாக தெரிகிறது. எனவே ராமன் ஓட்டு வீட்டில் தனியாக  வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு முதல் விடியற்காலை வரை பெய்த கனமழையால் ராமனுடைய வீட்டின் இருபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News