திருப்பத்தூர் மாவட்டத்தில் தட்டுப்பாடு இன்று யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இன்று யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல்

Update: 2021-06-08 15:29 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடுவதற்காக மக்கள் காலையிலிருந்து மாலை வரை சென்று வந்தனர் ஆனால் தடுப்பூசி இல்லை என அவர்கள் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கொரோனா தடுப்பூசி இனிவரும் காலங்களிலாவது அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Tags:    

Similar News