திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளனர்

Update: 2021-07-27 15:50 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில்,  கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்று  எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. மாவட்டத்தில் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன

இன்று ஒரே நாளில், திருப்பத்தூர்  மாவட்டத்தில் 23 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 27 பேர்,  குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் ஒருநாள் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 303 ஆக உள்ளது.

Tags:    

Similar News