திருப்பத்தூர் மாவட்டத்தில் 915 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 915 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53 கோடி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்

Update: 2021-12-14 14:48 GMT

திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்ட  கூட்டுறவு சங்கங்கள், திருப்பத்தூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் கொரோனாவால் வருமானம் இழந்து தவிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நிவாரண நலத்திட்ட கடன் உதவி வழங்கும் விழா தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் மாவட்டத்தில் உள்ள 915 குழுக்களுக்கு 53 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் கலந்து என பலர் கொன்டனர்.

Tags:    

Similar News