மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-10-23 14:53 GMT

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம், ஆதியூர் ஊராட்சி, இராவுத்தம்பட்டி கிராமம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி எத்தனை நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது குறித்தும் கேட்டறிந்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொதுமக்கள் அறியும்படி எடுத்துகூற வேணடும்.  ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உங்கள் ஊராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் எத்தனை நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள் என்ற விபரங்களை தயார் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேணடும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக கொரோனா தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வீடுவீடாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது. இக்கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம்  100 சதவிகிதம் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் செவலியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் உதவி ஆணையர் (கலால்) பானு, வட்டாட்சியர் சிவபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை ஆனந்தகுமார், சிவகுமார், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News