ஓடை நீரில் செல்லப்பட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பத்தூர்அருகே பாம்பாறில் கலக்கும் ஓடை அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம்

Update: 2021-11-25 14:53 GMT

நீரில் மூழ்கி இறந்த குழந்தையின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஏ கே மோட்டூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்த முத்து மகள் சஞ்சனா (3)  குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் கிஷாந்த்(3). இவர்கள் இருவரும் ஏகே மோட்டூர் பகுதியில் உள்ள பாம்பாறில் கலக்கும் ஓடை அருகே விளையாட சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டனர்.  தகவலை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி குழந்தைகள் இருவரையும் பலியான நிலையில் மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பின்பு பலியான 2 குழந்தைகளையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

பிஞ்சு குழந்தைகள் இரண்டு பேர் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News