திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 42 பேர் வீடு திரும்பினர்: 2 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 42 பேர் வீடு திரும்பினர், 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 2 நபர் இன்று உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 2 நபர்கள் இன்று உயிரிழந்தனர்
மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 233 ஆக உள்ளது