பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு 5 முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Update: 2021-09-25 09:29 GMT

பேரறிவாளன்(பைல்படம்)

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு இதுவரை தொடர்ந்து 5 முறை பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 29 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது அதன்படி, பரோல் விடுப்பில், தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டையில்  உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனது மகனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்  வழங்க வேண்டுமென அவருடைய தாயார் அற்புதம்மாள் கேட்டிருந்தார். அதனடிப்படையில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 5 முறை ஒரு மாதம் ஒரு மாதம் ஒரு மாதம்  வழங்கப்பட்டது. தற்போது ஐந்தாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அவரது வீட்டில் தற்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் உள்ளார்.

Tags:    

Similar News