பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

Update: 2021-12-24 16:30 GMT

பேரறிவாளன் 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 31 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கடந்த மே மாதம் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

இந்த நிலையில் தொடர்ந்து 7 மாத காலம் பரோல் நீடித்து வந்த நிலையில் தற்பொழுது ஒரு மாதகால பரோல் முடிவுற்ற  நிலையில் மேலும் 1 மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 8 வது முறையாக இந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News