பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Update: 2022-01-22 12:37 GMT

பேரறிவாளன் 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு உடல்நிலை கருத்தில் கொண்டு மருத்துவம் பார்க்க  பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள்  கோரிக்கை வைத்திருந்தார்.

அதன்படி அவருக்கு  கடந்த மே  மாதம் 28 ஆம் தேதி  பரோல்  வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.. அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையப்பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

வீட்டில் தங்கி பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் தனது உடல்நிலை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மாதம் பரோல்  வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.  அதனடிப்படையில் இன்று பேரறிவாளனுக்கு தொடர்ந்து 8 வது  முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

Tags:    

Similar News