பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை வழக்கில் சிறைக்கைதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு -தமிழக அரசு உத்தரவு

Update: 2021-11-25 00:24 GMT

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையில்  புழல் சிறையில் கொரானா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் அவருக்கு சிறுநீரகத் தொற்று கூறி தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார். 

அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.  அதனைத் தொடர்ந்து  சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு 6 மாத காலமாக வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனடிப்படையில் 7 வது முறையாக பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News