நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் ஆய்வு செய்தார்

Update: 2021-09-01 16:16 GMT

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தமிழகத்தில்  இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று  பள்ளியில் கொரோனா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு பாதுகாக்க இருக்க உரிய முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News