திருநெல்வேலியில் மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் இன்று திறப்பு

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தினை திறந்து வைக்க உள்ளார்

Update: 2021-07-31 02:51 GMT

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம்

திருநெல்வேலியில் மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் இன்று திறப்பு

இன்று 31.07.21 காலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்ட மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தினை திறந்து வைக்க உள்ளார் .

காலை 10.45 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மாற்றுத்திறனாளி அலுவலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

Tags:    

Similar News