விளாத்திகுளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-18 14:50 GMT

விளாத்திகுளம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கக்கன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பொன் மாரியப்பன் (35). விவசாயி, இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 9 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாராம். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News