வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கபசுரகுடிநீர்

தமிழ்நாடு அரசு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக, நன்னிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமைக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-04-23 03:45 GMT

தமிழ்நாடு அரசு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக முன்னாள் மாநில துணைத்தலைவர் முருகையன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கருவூலம் போன்ற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

பணி நிமித்தமாக அரசு அலுவலகங்களுக்கு வருகைபுரிந்த பொது மக்களுக்கும், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு வந்த பொதுமக்களுக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கருவூல அலுவலர் சண்முகம், வருவாய் துறை ஊழியர் சங்க வட்டத் தலைவர் கருணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் நெடுமாறன், ஓட்டுனர் அசோசியேஷன் நிர்வாகி கொரியர் ராஜா மற்றும் வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News