பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

Update: 2022-04-27 05:01 GMT
ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் தாய் மற்றும் மருத்துவ உதவியாளர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த முன்னவால்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதவன். இவரது மனைவி திவ்யா (23) 9 மாத கர்ப்பினியாக இருந்த நிலையில்  திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் காளாஞ்சிமேடு என்ற பகுதி அருகே திவ்யாவிற்கு பிரசவவலி அதிகரித்து துடிதுடித்துள்ளார்.

அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வாகனத்தை அதன் ஓட்டுநர் நிறுத்திட ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து மருத்துவ உதவியாளர் முரளி பிரசவம் பார்த்தார். அதில் திவ்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்து குவாகுவா என கத்தியது. பின்னர் தாயும், சேயும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரசவம் பார்த்த 108 உதவியாளருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

Similar News