கிராமப்புறங்களில் சுகாதார பணிகள் தொய்வு, கிராம மக்கள் ஆர்பாட்டம்

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-01 14:29 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்தொற்று காலத்தில், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி - திருமலாபுரம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2 -வது வார்டு பகுதிகள் உள்ளது. இந்த பகுதி தனியாக உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை, குப்பை அகற்றுவது, சுண்ணாம்பு தூள் தூவுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்கு சுகாதார பணியாளர்கள் வருவதில்லை.இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடான நிலை உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்தும், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர அமைப்பாளர் ஏ.டி.கணேசன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News