மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை சேர்ந்தவ ஒருவர் கைது

ஆண்டிபட்டியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-29 03:56 GMT
பைல் படம்

ஆண்டிபட்டி பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை சேர்ந்த ஒருவர் போலீசில் சிக்கினார். ஆண்டிபட்டி டி.வி.ரெங்கனாதபுரத்தை சேர்ந்தவர் சுரேன்குமார், 26. இவர் மதுரையை சேர்ந்த தனது நண்பர்கள் மணி, வசந்த் ஆகியோருடன் வீட்டருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆண்டிபட்டி எஸ்.ஐ., மாயன் அந்த வழியாக ரோந்து சென்ற போது இவர்களை பிடித்து விசாரித்தார். அப்போது மணி, வசந்த் ஓடி விட்டனர்.

சுரேன்குமார் சிக்கிக் கொண்டார். அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. இவர்கள் இந்த இடத்திலும், சுற்றுப்பகுதியிலும் நின்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News