கம்பம் அருகே வேன் மோதிய விபத்தில் தாய்- மகள் உயிரிழப்பு

கம்பம் அருகே அனுமந்தன்பட்டியில் வேன் மோதிய விபத்தில் தாய், மகள் பலியாகினர்.

Update: 2022-05-16 03:49 GMT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40.) இவர் டூ வீலரில் தனது மனைவி கஸ்துாரி,(33) மகள் ஸ்ரீஜா, (16) மகன் ஹரீஸ்,( 14 )ஆகியோருடன் வீரபாண்டி திருவிழாவிற்கு வந்தார். கோயில் விழா முடித்து விட்டு இரவு 9 மணிக்கு டூ வீலரில் நான்கு பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனுமந்தன்பட்டிக்கு வந்து கொண்டிருந்த போது, அனுமந்தன்பட்டி ரோட்டோரம் நின்றிருந்த காரின் கதவு வேகமாக திறக்கப்பட்டது.

இந்த கதவில் மோதி நான்கு பேரும் கீழே விழுந்தனர். அப்போது சென்னையில் இருந்து சபரிமலை சென்ற வேன் கீழே விழுந்தவர்கள் மீது ஏறியது. இச்சம்பவத்தில் கஸ்துாரி, ஸ்ரீஜா சம்பவ இடத்திலேயே பலியாகினர். குமரேசனும், அவரது மகன் ஹரீசும் பலத்த காயமடைந்தனர். உத்தமபாளையம் போலீசார் வேன் டிரைவர் திவானை(34 )கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News