வேளாண்துறை சார்பில் கிராம இளைஞர்களுக்கு தென்னை சாகுபடி முறை பயிற்சி..!

கிராமப்புற இளைஞர்களுக்கான தென்னை சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

Update: 2023-12-19 13:17 GMT

கிராம இளைஞர்களுக்கான தென்னை சாகுபடி பயிற்சி.

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டம் மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான தென்னை சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி இன்று (19ம் தேதி) தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஏழு நாள் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

இப்பயிற்சியில் சாக்கோட்டை, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் தஞ்சாவூர் திரு. ந.க. நல்லமுத்துராஜா தலைமையுறையாற்றினார்.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் ம.சுருளிராஜன் திட்ட விளக்க உரை வழங்கினார். இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 28 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உதவி பேராசிரியர் நோயியல் முனைவர் ம. சுருளிராஜன் தென்னையில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் பாடல் பாடி விவசாயிகளுக்கு விளக்கமான முறையில் எடுத்துக் கூறினார். 


வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதுக்கூர் சி.சுகிதா தென்னையில் நுண்ணுட்ட சத்தினை மேம்படுத்த இயற்கையான முறையில் போறான் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சியில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் காளான் உற்பத்தி மையம் விவசாயிகளுக்கு நேரடியாக உதவி வேளாண்மை அலுவலர் விஜயலலிதா காண்பித்து விளக்கம் அளித்தார்.

மேலும் தென்னை பண்ணையில் உள்ள நாற்றங்கால் மற்றும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களையும் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவாக உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் கண்ணன் விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

அடுத்த ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் பயிற்சியில் தென்னை ரகங்கள், தென்னையில் நோய் மேலாண்மை முறைகள், தென்னையில் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள் மற்றும் நீரா பானம் தயாரித்தல் என்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற இருப்பதால் இன்று பயிற்சியில் கலந்து கொண்ட 28 விவசாயிகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News