சிவகங்கை அருகே வரும் 19 -ல் வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்ட அளவிலான மனுநீதி நாள் முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெறவுள்ளது

Update: 2022-05-17 01:30 GMT

பைல் படம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் வருகின்ற 19.05.2022 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  முன்னிலையில்  நடைபெறும்  வட்ட அளவிலான நடைபெறவுள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.  தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவுள்ளனர்

, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் நகர், அழகப்பா பாக்கிய திருமண மண்டபத்தில் வருகின்ற 19.05.2022 அன்று காலை 10.00 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறப்படும்..

இம்முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுமாறு  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News