சிராவயல் ஜல்லிக்கட்டு : ஜனவரி 17 -க்கு மாற்றம் மாவட்ட ஆட்சிர் தகவல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் திங்கள்கிழமை (ஜன.17) நடைபெறும் என விழாத்தலைவர் தெரிவித்தார்

Update: 2022-01-12 04:51 GMT

சிராவயல் ஜல்லிக்கட்டு  வாடிவாசவ்

சிவகங்கை மாவட்டம், சிறாவயலில் ஜனவரி 16 ல்  நடைபெறக்கூடிய  ஜல்லிக்கட்டு  17 தேதிக்கு மாற்றம் செயப்பட்டுள்ளதாக  மாவட்ட  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக விழா தலைவர் வேலுச்சாமி அம்பலம் தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜன.16 ல் 300 வருடங்களுக்கு மேலாக  ஜல்லிக்கட்டு  நடத்தப்பட்டு வருகிறது புகழ்பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.



இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜனவரி 16 - ஆம் தேதி தமிழக அரசு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது இதனால் சிராவயல்  ஜல்லிக்கட்டு  ஜன 16 ல் நடக்குமா? என கேள்வி எழுந்த நிலையில்,  சிராவயல்  ஜல்லிக்கட்டு  திட்டமிட்டபடி ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தீர்மானித்திருந்த நிலையில்,

  மாவட்ட ஆட்சியருடன்  நடத்திய  ஆலோசனைக்குபின் 17தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிராவயல் மஞ்சுவிரட்டுவிழா தலைவர் வேலுச்சாமி அம்பலம்  தெரிவித்தார் .


Tags:    

Similar News