விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெற தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-05-21 11:15 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெற தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேர - பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிவகங்கை மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News