சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

Update: 2023-10-27 12:54 GMT

சிவகங்கை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

01.01.2024- ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்  தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இன்றைய தினம் (27.10.2023) வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, 01.01.2024- ஐதகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் எனவும் அறிவித்து உள்ளார்.

அதன்படி, 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி, சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை , தேவகோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News