சிவகாசி சிவன் கோவிலில் மகாளய அமாவாசைக்கு திரண்டு வந்த பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் பிரசித்திபெற்ற சிவன் கோவிலில், இன்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
இன்று அதிகாலையில் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, பூரண தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், முன்னோர்கள் ஆன்மா சாந்தி பெற வேண்டி, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகம், சுவாமி சன்னதிகள் முன்பு நெய் விளக்கேற்றி வணங்கி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் மகாளய அமாவாசை தின விரதம் இருந்து சுவாமியை தரிசித்தனர்.