அழகப்பாபல்கலைக்கழக கல்லூரிகளின் என்எஸ்எஸ் திட்ட மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.

Update: 2021-12-05 00:15 GMT

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. 38 மாணவர்கள் கலந்து கொண்டதில், ஹரிஸ்வேத்தா என்ற மாணவி முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்க தகுதி பெற்றார்.மேலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.


Tags:    

Similar News