தமிழகம் முழுவதும் மாணவிகள்பாலியல் துன்புறுத்தல்: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

மாணவிகள் பாலியல் துன்புறுத்தலில் திரை மறைவில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2021-11-23 11:00 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நிர்வாகி சாய்ராம் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் மாணவிகள்பாலியல் துன்புறுத்தலில், திரை மறைவில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி  நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நிர்வாகி  சாய்ராம் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவிகள் மீது தொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்களுக்கு காரணமானவர்களின் பின்புலத்தை தீர விசாரித்து, திறை மறைவில் உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி. கல்லூரி மாணவிகள் மீது நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

அதற்கு முடிவு கட்டும் விதமாக தேசிய மகளிர் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.  பெண்பிள்ளைகள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதல்களை கண்காணித்து தண்டிக்கும் விதமாக பெண் காவலர்களை உளவுத்துறை அதிகாரிகளாக அதிக எண்ணிக்கையில் பணியமர்த்த  ஒன்றிய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Tags:    

Similar News