காரைக்குடி அருகே விபத்து - காவலர் மரணம்

Update: 2021-06-13 06:06 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. (34) இவர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று பணிக்கு செல்லும் போது திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி  வந்த கார் மோதி காவலர் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குன்றக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News