காரைக்குடி அரசு மருத்துவமனை- -பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

Update: 2021-06-10 13:40 GMT

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர்கள் 100 பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது.ரயில்வே பீடர் ரோடு காந்தி மாளிகை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 ஆக்ஸிசன் வசதியுள்ள கொரோனா வார்டும் புதிய மருத்துவமனையில் 200 ஆக்சிசன் படுக்கை 100 சாதாரண படுக்கை என 300 மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன.

இவற்றில் கொரோ தொற்றாளர்களுக்கு உதவியாக உள்ள உறவினர்களுக்கு இருக்கை எதும் இல்லாததால் தொற்றாளர்களுடன் ஒரே படுக்கையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ கவனித்து கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது இதனையறிந்து முதல் கட்டமாக 100 பிளாஸ்டிக் இருக்கைகளை சமூக ஆர்வலர் ராஜ்குமார் தலைமையில் தலைமை மருத்துவர் தர்மரிடம் வழங்கினர்.

மற்றொரு நிகழ்வில் கனடா வாழ் நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 120 பேருக்கு அரிசி மளிகை பொருட்களை டூரிஸ்ட் கார் வேன் ஓட்டுநர் சங்க தலைவர் பரமசிவம் வழங்கினார். 

Similar News