சேலத்தில் லாரியில் கடத்த முயன்ற 17 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற, 17 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-29 02:17 GMT

மாதிரிப்படம்

சேலத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் அதனை பின் தொடர்ந்து வந்த மூன்று சிறிய ரக சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, வாகனத்தில் வந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். இதனையடுத்து வாகனங்களில் சோதனை நடத்தியபோது, அவற்றில் ரேசன் அரசி இருப்பதை உறுதி செய்தனர். 17 டன் அளவுக்கு இருந்த ரேசன் அரிசியையும், 4 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ரேஷன் அரிசி கடத்தலுக்கு காரணமாக இருந்த சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேசன் அரிசி மூட்டைகள் அனைத்தும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இந்த கடத்தலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கோபிநாத் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News