சேலம் குமாரசாமிப்பட்டி தடுப்பூசி மையம் வேறு இடத்திற்கு மாற்றம்

கூட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-29 04:56 GMT

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம் மாற்றப்பட்டதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. 

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். 

நேற்று 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்ததால், மருத்துவப் பணியாளர்களும் காவல்துறையினரும் செய்வதறியாது திகைத்தனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, நாளுக்குநாள் அதிகரித்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த,  குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம், வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள, சேலம் ராஜாஜி சாலையில் இருக்கும் ஸ்ரீ சாரதா பாலமந்திர் பள்ளி வளாகத்தில், இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News