வரதட்சணை கொடுமை: கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் இளம் பெண் புகார்

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இளம்பெண் மனு அளித்துள்ளார்.

Update: 2021-07-03 07:00 GMT

வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்வதாகக்கூறி,  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் பிரீத்தா.

தர்மபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகள் பிரித்தா என்பவருக்கும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வெங்கடேஸ் என்பவருக்கும், கடந்த ஜூன் 1 ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் கணவர் வீட்டில் வசித்து வந்த பிரித்தாவை, கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்தும் பிரித்தா ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பிரித்தா பெற்றேருடன் வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News