எடப்பாடி கொரோனா சோகம்: இறந்தவர்கள் உடலை எரியூட்ட காத்துகிடக்கும் அவலம்!

எடப்பாடி நகராட்சி நவீன தகன எரிவாயு மேடையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை எரிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-25 02:45 GMT

பிணத்தை எரிக்க காத்திருக்கும் உறவினர்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க எடப்பாடி கொங்கணாபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு எடப்பாடி நாராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை மட்டுமே எரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனால் கொரோனா நோயாளியின் உடல்நிலை எடப்பாடியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடையில் தகனம் செய்ய ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட உடல்கள்  வருவதால்  தகன மேடையில் தகனம் செய்ய ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக உறவினர்கள் உடல்களை வைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News