சோளிங்கர் தாலூக்காவில் ஜமாபந்தி நிறைவு - எம்.எல்.ஏ பங்கேற்பு

சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது. இதில், பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-07-07 05:09 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலூக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி, கடந்த ஒரு வாரமாக,  மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் (நிலம்), பூரணி தலைமையில் நடந்து வந்தது. .ஜமாபந்தியில்,  சோளிங்கர், கொடைக்கல், தகரகுப்பம்,,ரெண்டாடி,,கல்பட்டு, புலிவலம், ,கொண்டப்பாளையம் உட்பட 16கிராம மக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 160மனுக்களும், பெட்டி மூலம்144மனுக்கள் உட்பட 304மனுக்கள் பெறப்பட்டன.

இதில், 17 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டன. சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டா 4பேருக்கும் , ,புதிய குடும்ப அட்டைசான்றிதழ்2பேருக்கும் வாரிசு சான்று,மற்றும் ,விதவைச்சான்று 2பேருக்கும், ஆண் குழந்தை இன்மை சான்றிதழ் 8பேர் உட்பட மொத்தம் 17பேருக்கு வழங்கினார்.

மேலும்,   பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு தகுதி உள்ள அனைவருக்கும் மாத இறுதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News