அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களைக் கைது செய்தப் போலீஸார் 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்

Update: 2021-12-07 16:07 GMT

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டவுன் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, புதிய பேருந்து நிலையத்தின் கடைசியாக உள்ள  மறைவான இடத்தில், போலீஸார் சந்தேகிக்கும் வகையில் 2, வாலிபர்கள் சுற்றித் திரிந்தனர்.

உடனே,,போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் , அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்(26), மேட்டுக்குன்னத்தூர் சக்திவேல்(22) என்பதும் இருவரும் கஞ்சாவைக்  ஆந்திராவிலிருந்து  கடத்தி வந்து சிறு சிறு  பொட்டலங்களில்  மடித்து   சில்லரை  விற்பனை  செய்து வருவது தெரியவந்தது .

இதனையடுத்து அரக்கோணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,தினேஷ்குமார், சக்திவேல்ஆகிய  இருவரையும் கைது செய்து பதுக்கிவைத்திருந்த 1 கிலோ,100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News