அரசு உத்தரவை மீறுவாேருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை

Update: 2021-04-20 08:15 GMT

தொண்டியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், கடை வீதிகளில் அரசு உத்தரவை அத்துமீறும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்த புது கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாஸ்க் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மோட்டார்பைக் மற்றும் 4 சக்கர வாகனத்தில் செல்வோர் மாஸ்க் அணியாமல் சென்று வருவதால் அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

மேலும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணியாமலேயே நிற்கின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்லும் பயணிகளும் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பெரும்பாலும் மாஸ்க் அணிவதில்லை. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.எனவே சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கும் போலீசார் கடைத்தெரு ,பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிலும் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News