தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்

தொண்டி அருகே நள்ளிரவு சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது.

Update: 2022-04-10 05:30 GMT

தொண்டி அருகே, மணல் கடத்திய கும்பல் விட்டுச் சென்ற வாகனங்கள். 

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே,  எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,  தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட போலீஸார் கூட்டாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது,  அங்கு டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல்,  போலீஸாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஒடியது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 டிராக்டர் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றி,  வழக்கு பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News