திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ

ரூ.46 லட்சம் மதிப்பிலான 4 புதிய மின்மாற்றிகளை திருவாடானை எம்.எல்.ஏ பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Update: 2021-10-26 16:00 GMT

புதிய மின்மாற்றியை திறந்து வைத்த திருவாடனை எம்எல்ஏ. 

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம், சேந்தனேந்தல், ஆனந்தூர், திருவாடானை ஆகிய 4 பகுதிகளில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 11 கிலோ வாட் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. அதனை இன்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சம்மந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். இந்ந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News