இராமநாதபுரம் அருகே மோட்டார்பைக், பனைமரத்தின் மீது மோதியதில் இருவர் பலியானார்கள்.
இராமநாதபுரம் காய்கறி சந்தையில் வேலை செய்து வரும் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் கார்த்திக் மற்றும் தனியார் மோட்டார்பைக் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வரும் கர்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்களும் இராமநாதபுரத்திலிருந்து தேர்போகி கிராமத்தில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் மோட்டார்பைக்கில் வந்த இவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.