கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியோருக்கு, நீலகிரி ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 13:28 GMT

நீலகிரி மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி கணக்கிற்கு கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக 2020-2021ஆம் ஆண்டில், இன்று வரை, ரூ.68,68,025, வழங்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் மட்டும் இன்று வரை ரூ.13,53,679/ பெறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News