124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-20 12:07 GMT



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தின் பழங்குடி பெருமக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர், கோத்தர் மற்றும் காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News