நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று செயல்பட்ட 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Nilgiri News, Nilgiri News Today - நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2023-08-17 14:52 GMT

Nilgiri News, Nilgiri News Today-சுதந்திர தினத்தன்று செயல்பட்ட 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தன்று இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களை கண்டறிந்து அந்நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறைகள்) சட்டம், 1957-ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் தலைமையில் தொழிலாளர் நலத்துறையினர் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என சுமார் 60 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்

இந்த ஆய்வில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 36 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர் நலத்துறை மூலம் இதுபோன்று தொடர் நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் காணப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News