திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-22 04:30 GMT

திருச்செங்கோடு அரச ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து, திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள பச்சிளம்  குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு, பொது வார்டுகளுக்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து ரத்த வங்கிக்கு சென்ற கலெக்டர், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அலுவர்களிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை வார்டுக்கு சென்ற கலெக்டர், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகை தந்தவர்களிடம் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது,  திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சை பிரிவு டாக்டர் சத்தியபானு, தடுப்பூசி பிரிவு டாக்டர் மோகனபானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News