மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக அதிமுக பெண் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வனிதா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-23 01:45 GMT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வனிதா போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், 3 முறை துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு போதிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய பிடிஓ அருண்குமார் முன்னிலையில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கலையரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தினார். தேர்தல் கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்தனர். மேலும், 4 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. வருகை தந்தவர்களை வைத்து தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிமுகவைச் சேர்ந்த 5வார்டு உறுப்பினர் வனிதா, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News