மல்லசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.;
மல்லசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் அருகே உள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ( 35), கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஒகிதா (4) என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று ஒகிதா அதே பகுதியில், ஆற்றங்கரையோரம் உள்ள தனது தாத்தா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததார். அப்போது அச்சிறுமி எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி சிறுமி ஒகிதா பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற மல்லசமுத்திரம் போலீசார் ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.