சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ: பொதுமக்கள் அச்சம்

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Update: 2022-03-16 06:30 GMT

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில், மாசி மலையான் கோயில் குன்று அமைந்துள்ளது. இந்த குன்று சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த குன்றின் மேல் வளர்ந்து காணப்பட்ட செடி கொடிகள் மற்றும் புதர்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள் தவறுதலாக தீக்குச்சிகளை பற்ற வைத்து அணைக்காமல் போட்டுவிட்டனரா அல்லது வேறு யாராவது காரணமா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. மேலும் கோடை வெப்பத்தின் காரணமாக காய்ந்த சருகுகள் திடீரென்று தீப்பிடித்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இரவு நேரத்தில் பற்றி எரிந்த தீ பல கி.மீ தூரம் வரை தெரிந்ததால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News