சேந்தமங்கலத்தில் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

சேந்தமங்கலம் பகுதிகளில் வரும் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்தார்.

Update: 2021-09-20 10:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 22ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News