சேந்தமங்கலம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர், கிளீனர் கைது

சேந்தமங்கலம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-24 08:00 GMT

சேந்தமங்கலம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கடந்த 22ம் தேதி கொல்லிமலையில்  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவில் சேந்தமங்கலம் வழியாக காரில் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ராமநாதபுரம்புதூர் கிராமம் அருகில் மண் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அதனை பார்த்த கலெக்டர் அந்த லாரியை மடக்கி பிடித்து, அதிலிருந்த 2 பேரிடம் விசாரித்தார். அதில் அவர்கள் நாச்சிபுதூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் (வயது 26), விழுப்புரம் மாவட்டம் கண்ணாச்சிபுரத்தை சேர்ந்த கிளீனர் பூவரசன் (21) என்பதும், லாரியில் அனுமதி இன்றி மண் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க சேந்தமங்கலம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன், பூவரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News